"ஒரு நாள் கலைவிழா இலக்கியம்-ஓவியம்-நாடகம் " 12.10.2024 சனிக்கிழமை

Posted by Sindumathi S on October 11, 2024

 அனைவருக்கும் வணக்கம்!

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 12.10.2024 சனிக்கிழமை அன்று "ஒரு நாள் கலைவிழா:இலக்கியம்-ஓவியம்-நாடகம்" என்னும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . இந்நிகழ்ச்சியில் பகல் 11.00 மணி அளவில் பல்வகைப் பயன்பாட்டு அரங்கில்  "தமிழ்ச் சமூகமும் அவைதீக மரபும் " என்னும் தலைப்பில் முனைவர் "வீ .அரசு" அவர்களுடன் கலந்துரையாடலும் மற்றும்  மாலை 4.00 மணி அளவில் ஓவியர் "ட்ராட்ஸ்கி மருது " அவர்களுடன் "எனது ஓவியங்கள் " என்னும் தலைப்பில் கலந்துரையாடலும்  விளக்கச் செயல்முறையும் நடைபெறவுள்ளது . மேலும் மாலை 6.30 மணி அளவில் மாநாட்டுக்கூடத்தில் "அ.மங்கை " அவர்களின் "ஸ்த்ரீ பர்வம்" என்னும் நாடகம் நடைபெறவுள்ளது . எனவே இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்.