• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 05.01.2026 முதல் 22.01.2026 எம்பிராய்டரி பயிற்சி

அனைவருக்கும் வணக்கம் ! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தால் நடத்தப்படும் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியின் வரிசையில் 05.01.2026 முதல் 22.01.2026 வரை எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமுடைய 25 முதல் 35 வயது வரை உள்ள பெண்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளன. பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் : 02.01.2026

முன்பதிவு செய்ய: https://tinyurl.com/kclembroidery





"எழுத்தாளர் மேடை" 03.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணி

அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் மேடை" நிகழ்ச்சியில் 03.01.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பல்வகைப் பயன்பாட்டு அரங்கில் இளம் கவிஞர் திரு. குட்டி அவர்கள், தமது கவிதை  நூலான "இராசாத்தி" குறித்து நம்முடன் கலந்துரையாட உள்ளார். இந்நிகழ்விற்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்!



Chess@KCL” "Open ChesTournament

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  சனிக்கிழமைதோறும் நடைபெற்றுவந்த "Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற  குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், விடுமுறை கால  நிகழ்வாகவும் இன்று  (29.12.2025)  காலை 10.00 மணிக்கு "CHESS@KCL   2nd CHAMPIONSHIP -2025 

"Open ChesTournament   என்ற சதுரங்கப்போட்டியானது இனிதே நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,நற்சான்றிதழ்களும்,பங்கு பெற்றவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களும் நாளை (30.12.2025) நடைபெறவுள்ள நிறைவு நாள் விழாவில்  வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்..இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ... 


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு: https://www.facebook.com/share/p/17qngp2AYS/


குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

 மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 29.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.மொ.பாண்டியராஜன் ( Director ,Eden Science Club )  அவர்களின்  "Foldscope Workshop" என்ற பயிற்சிப் பட்டறையில் இன்று (28.12.2025) மூன்றாம் நாள் நிகழ்வில் திருமிகு. மொ.பா அவர்கள் ,Foldscope பயன்படுத்தி  நுண்ணுயிர்கள், பாசி, கொசுவின் தலை, வேரின் முடுச்சு, தாவர செல், ரைசோம், தட்டை புழு, ஓரணுவுயிர் (Paramecium), மனிதனின் மண்டைஓடு, திசுக்கள் போன்றவற்றை லென்ஸ் மூலம் காண்பது குறித்து செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சி அளித்தார் . இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்று பயன் பெற்றனர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/1HKF6L5GVF/



குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 28.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின்  "Art & Craft" என்ற 3 நாள் பயிற்சிப் பட்டறை இன்று (28.12.2025)  இனிதே நிறைவுபெற்றது, இன்றைய நிகழ்வில் திருமிகு.A.செய்யது இப்ராஹிம் ,அவர்கள்  தூரிகை வண்ணத் துணி ஓவியம் வரையவது பற்றி செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சியின் மூலம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் ,மேலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மன வரைபடம் (Mind Map ) வரையச்செய்து அதில் சிறந்த சில வரைபடங்களை தேர்வுசெய்து அவர்களுக்கு தூரிகை வண்ணத் துணி ஓவியம் வரையச்செய்து சிறந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபெற்று தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.



இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு :https://www.facebook.com/share/p/1Fp3xYaKmK/



குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

 அனைவருக்கும் வணக்கம் !


மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 29.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.மொ.பாண்டியராஜன் ( Director ,Eden Science Club )  அவர்களின்  "Foldscope Workshop" என்ற பயிற்சிப் பட்டறையில் இன்று (27.12.2025) இரண்டாம் நாள் நிகழ்வாக Leave Structure (இலைகளின் கட்டமைப்பு), Stomata (இலைத்துளைகள்),Petals (பூவிதழ்கள்), Polan Grains (மகரந்தத் துகள்கள்) போன்ற தாவரங்களின் உடற்கூறியல் குறித்து செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்று பயன் பெற்றனர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1HiQuENGyB/



குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி பட்டறை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 28.12.2025 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின்  "Art & Craft" என்ற 3 நாள் பயிற்சிப் பட்டறையில் இன்று (27.12.2025) இரண்டாம் நாள் நிகழ்வாக முப்பரிமாணக் கலை வடிவங்களை (3D Art) மிக எளிமையாகவும், நுணுக்கமாகவும் எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் செய்முறை விளக்கங்களுடன் நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது. கற்பனைத் திறனுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபெற்று தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகள்.

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1ACHq6oUhe