• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

“நூல் அரும்புகள்” (22.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணி

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.03.2026) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில்,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனைவரும் வருக !, அனுமதி இலவசம் ! .



“குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" (22.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும்,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதன்படி (22.03.2026) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு  Dr.P. Sundaresan, ICMR  Emeritus scientist,Molecular Genetics, Aravind Medical Research Foundation, Madurai.அவர்கள் வழங்கும் “குழந்தைகளே! உங்கள் விழிகளைக் காக்க விழித்திடுவீர்" எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!. 


இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids


"இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு 22.03.2026, ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 வரை

 அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று " நிகழ்ச்சியில் "உலக தண்ணீர் தினத்தை"முன்னிட்டு   22.03.2026, ஞாயிற்றுக்கிழமை  காலை 11.30 மணி முதல் 12.30 வரை  இரண்டாம் தளத்தில் திருமதி. இரா.கீதாமணி,சமூக விழிப்புணர்வு பேச்சாளர் , அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


“நூல் அரும்புகள்” (22.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 அனைவருக்கும் வணக்கம்!,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மேடையில் பேசும் வாய்ப்புகளைக் கொடுத்து, மேடையில் பேசும் போது ஏற்படும் கூச்சத்தை போக்கும் வகையிலும் வாரம்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.30 மணிக்கு குழந்தைகளுக்கான "நூல் அரும்புகள்" என்ற நூல் விமர்சனம் நிகழ்வு குழந்தைகள் பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது .

அதன் ஒரு பகுதியாக (22.03.2026) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நடைபெறும். நிகழ்ச்சிக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது . அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அதை படித்துவிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் புத்தக விமர்சன நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் (ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சமாக 5 சிறார்கள், ஒருவருக்கு ஐந்து நிமிடம்).முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். இதில் பங்கு பெறும் சிறார்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். அனுமதி இலவசம் ! நன்றி...

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-Kids-Nool-Arumbukal



"கலைப்பட்டறை " நிகழ்ச்சி " MADHUBANI POUCH ART " பயிற்சி 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்ற நிகழ்ச்சியில்  திருமதி M  யாமினி அவர்கள் "" MADHUBANI POUCH ART " பயற்சி அளித்தார்  இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் இளையோர் பங்குபெற்று ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர் .


குழந்தைகள் நிகழ்ச்சிகள் "நூல் அரும்புகள்” மற்றும் “மதுபானி கலை மற்றும் வண்ணம் தீட்டுதல்” (15.03.2026) ஞாயிறு காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று   (15.03.2026 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு, குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 மணிக்கு திருமிகு.அந்துவன் கபிரியேல் (கலைடாஸ்கோப்) அவர்கள் வழங்கும் “அந்துவனும் ஆதனும்” (வரலாறு சார்ந்த கதையாடல்கள்) எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருமிகு.அந்துவன் கபிரியேல் அவர்கள் வரலாற்றை குழந்தைகளிடம் எடுத்துச்சொல்லும் நோக்கத்தோடு வரலாறு சார்ந்த கதையாடல்கள்  என்கிற தலைப்பில் சிந்து சமவெளி மற்றும் கீழடி நாகரீகம் சார்ந்த வரலாற்று புனைவு கதைகளின் வாயிலாக ஒரு கதையாடல் முன்னெடுக்கப்பட்டது .இந்நிகழ்வானது குழந்தைகளுக்கு வரலாற்று நிகழ்வுகளை புரிந்துகொள்ளும் விதமாக அமைந்தது. இதில் ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17DN5WLQD6/



குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான திரைப்படம்,அபாகஸ் பயிற்சி,சதுரங்க பயிற்சி (14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று 

(14.03.2026)சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "The Myth of  Maracuda"  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது , அதனை தொடர்ந்து  மாலை 5.30 மணிக்கு  திருமதி.அ.கௌசல்யா மற்றும் திருமதி.ரா.ஞானசுந்தரி  அவர்களின் 23வது  "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி வகுப்பு மற்றும் திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 73வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி வகுப்பும்  சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி..


இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு:https://www.facebook.com/share/p/1ArUNPpHH6/