• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

"PUPPET SHOW" (21.12.2025) ஞாயிறு காலை 11.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 


அதன்படி (21.12.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  திருமிகு.S.ஆனந்த சொரூப சாந்தி, பேராசிரியர் (ஓய்வு), அவர்கள் வழங்கும்  "PUPPET  SHOW" எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி...,அனைவரும் வருக! அனுமதி இலவசம்!.

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids




சிகரம் தொடு 21/12/ 25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி Know the Constitution, Crack the Competition

 அனைவருக்கும் வணக்கம்! 

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் Know the Constitution, Crack the Competition* என்ற தலைப்பில் J Ayyambose B.A., B.L Advocate அவர்கள் 21/12/ 25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார் இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்

 அனுமதி இலவசம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/Sigaram-thodu




“நூல் அரும்புகள்” 14.12.2025 ஞாயிறு காலை 10.30 மணி

அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று  (14.12.2025 ) ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

            மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 திருமிகு.P.ராஜலெட்சுமி மற்றும் திருமிகு. M.வைஷ்ணவி அவர்கள் வழங்கும்  "Mind stimulating activities" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திருமிகு.P.ராஜலெட்சுமி மற்றும் திருமிகு. M.வைஷ்ணவி அவர்கள்,

நினைவக விளையாட்டுகள், நினைவக வினாடி வினா, I Spy" (நான் பார்க்கிறேன், வார்த்தையோடு விளையாடு, பாதி படத்தைப் பயன்படுத்தி ஒரு படத்தை வரையவும்(Draw a Pic), ஒரு பட அட்டையைப் பயன்படுத்தி கதை சொல்லல், வரிசை விளையாட்டு & XO குறுக்கு விளையாட்டு (tic tac toe ), செயலை யூகிக்கவும் (Guess the Action), tongue twister  போன்ற செயல்பாடுகள் மூலம் குழந்தைகளின் அறிவுத்திறனை  மேலும் வளமூட்டும் வகையில் பயிற்சி அளித்தார் .இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...




“இளையோர் களம்” 12/12/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

அனைவருக்கும் வணக்கம்- நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (12.12.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌  என்ற நிகழ்வானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மாணவ/மாணவிகள் பங்கேற்று தங்களது தனித் திறமைகளை (நடனம் , இசை,உரை,) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி






"Chess@KCL" 13.12.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு

 


வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும்  நினைவாற்றலை   அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும்  விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்  வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் (13.12.2025) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 62வது  "Chess@KCL" என்ற சதுரங்க இடைநிலை (intermediate) பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். 

அனுமதி இலவசம்!  நன்றி ... 

முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCLChess

சிறுவர்களுக்கான திரைப்படம் "NUMERO 9 " (13.12.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு

 


அனைவருக்கும் வணக்கம்,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது.இந்த வாரம் (13.12.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "NUMERO 9 "  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...அனுமதி இலவசம்!. 

முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.

முன்பதிவுக்கு : http://tinyurl.com/kcltheatre

“Become an Indian Air Force (IAF) Officer: All Graduates & Engineers” 11/12/2025 வியாழக்கிழமை 3.00 மணிக்கு

 



அனைவருக்கு வணக்கம்.

மதுரைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 11.12.2025 அன்று மாலை 3.00 மணிக்குத் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் BECOME AN INDIAN AIR FORCE OFFICERS : ALL GRADUATES & ENGINEERS  என்ற நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர்த் திரு P.U .பிரபு BE அவர்கள் சிறப்புரையாற்றி, போட்டித்தேர்வு மாணவர்களின் ஐயங்களுக்கு  விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளாமான போட்டி தேர்வு மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர் நன்றி.