• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

Popular science lecture on "Science without humanity: Destructive weapons and victims" வெள்ளிக்கிழமை (08.08.2025) மாலை 5.00 மணிக்கு

வணக்கம்,

கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (08.08.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு "17th Popular science lecture on "Science without humanity: Destructive weapons and victims" என்னும் தலைப்பில் முனைவர் ரா.ஆண்டனி பால், இணை பேராசிரியர் & தலைவர்(ஓய்வு), வரலாற்றுத்துறை,அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்!

நன்றி ... முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCL-TNSF1

                               

"அலுவல் சார்ந்த அடிப்படை கணினி பயிற்சி "

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அலுவல் சார்ந்த அடிப்படை கணினி பயிற்சி 2.8.2025, சனிக்கிழமை அன்று தொடங்கியது. கணினி அடிப்படை,  தட்டச்சு, MS Word, Excel, Powerpoint, Google Suit - Google docs, sheet and presentation, Computer Hardware and Networking, AI tools, OCR, Email, Canva design, Social media ஆகிய தொழில்நுட்பங்களில்  மூன்று மாத காலம் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) நடைபெறும் இந்த பயிற்சியில் 38 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். நிகழ்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (பொ) திரு.சந்தானகிருஷ்ணன், நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் திரு. ஜெ. ஜெபா ஜோஸ்லின், திருமதி. சரிதா மற்றும் நூலகர்கள்  கலந்துகொண்டனர்.








"நிலவொளியில்" வெள்ளிக்கிழமை 08/08/2025 மாலை 6 மணிக்கு

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது   08/08/25 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கின்றது இதில் புத்தகங்களை விமர்சனம் செய்யலாம் தாங்கள் படித்து உணர்ந்த புத்தகத்தின் மேன்மையான கருத்துக்களை இங்கே பதிவிடலாம், தனது சொந்த கவிதைகளை சமர்ப்பிக்கலாம் இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். சங்க கால இலக்கியங்கள் பற்றிய உரை நிகழ்த்தலாம்.  பார்வையாளராகவும் பங்கேற்கலாம்

இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட இனணப்பில் பதிவு செய்து தாங்கள் படைக்க இருக்கும் படைப்பின் விவரங்களையும் இதில் பதிவு செய்து விடுங்கள்..


 முன்பதிவிற்கு : https://tinyurl.com/nilavozhiyil

 நாள் : 08/08/2025    வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி முதல் 7 மணி வரை

 இடம் :  கலைஞர் நூற்றாண்டு நூலகம்  நான்காம் தளம்


இன்று “கலைஞரும் தமிழும்” 07.08.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு

வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 07.08.2025 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் “கலைஞரும் தமிழும்” என்ற தலைப்பில் நல்லாசிரியர் திரு. மு. மகேந்திரபாபு அரசு மேனிலைப்பள்ளி, இளமனூர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.





Chess @ KCL சனிக்கிழமை (02.08.2025) மாலை 5.30 மணிக்கு

வணக்கம்! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில்  குழந்தைகளின் மூளைக்கு சிறந்த பயிற்சி மற்றும்  நினைவாற்றலை   அதிகரிக்கும் வகையிலும், கவனக்குவிப்பு மற்றும்  விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்  வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி நூலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் (02.08.2025) சனிக்கிழமை அன்று திரு .எஸ் .உமாசங்கர்  அவர்களின் 45வது  "Chess@KCL  " என்ற சதுரங்க பயிற்சி நடைபெறவுள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி இலவசம்! 

நன்றி ... 
முன்பதிவிற்கு :https://tinyurl.com/KCLChess

Abacus @ KCL சனிக்கிழமை (09.08.2025) மாலை 5.30 மணிக்கு

 வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு எண்கணித கணக்கீடுகளை எளிதாக்கும் முயற்சியாகவும்,  கணிதத்தின் மீதான பயத்தைப் போக்கி, ஆர்வத்தை உண்டாக்கிடவும் , எண் நினைவாற்றலை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கைதேர்ந்த நிபுணர்களை கொண்டு குழந்தைகளுக்கான "Abacus@KCL" என்ற அபாகஸ் தொடர் பயிற்சி நடைபெறவுள்ளது. அந்த வகையில் (09.08.2025) சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு "Abacus@KCL" என்ற அபாகஸ் பயிற்சி இனிதே  துவங்க உள்ளது , ஆகவே விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். அனுமதி முற்றிலும்  இலவசம்! நன்றி ... 


குறிப்பு :-  1. வயது (age ) 6 முதல் 14 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
                    2. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் 
                    3.முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் .

முன்பதிவிற்கு  https://tinyurl.com/Abacus-at-KCL





"எழுத்தாளர் மேடை"

 அனைவருக்கும் வணக்கம் ! கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "எழுத்தாளர் மேடை" என்னும் நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக 26.07.2025 மாலை 4:30 மணிக்கு இளம் எழுத்தாளர் திரு. க்ரிஷ்பாலா அவர்கள், தமது கவிதை  நூலான "மெல்ல செத்து மீண்டு வா" குறித்து நம்முடன் உரையாடினார்.  “இந்தக் கவிதைகள் அனைத்தும் என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட உணர்வுகளின் பிரதிபலிப்புகள். அவையே என்னை மீண்டும் வாழ தூண்டியவை,” என அவர் உணர்வுபூர்வமாக பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, கவிதைகளையும் கருத்துக்களையும் விரிவாக அறிந்த வாசக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! வாருங்கள்!