• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

"கவிதைப் பயிலரங்கம்" திரு.மனுஷ்ய புத்திரன் 24.11.2025 திங்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.00 மணி

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 24.11.2025 திங்கள் அன்று காலை 11 மணி முதல் மதியம் 1.00 மணி வரை திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களால் "கவிதைப் பயிலரங்கம்" நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணைப்பில் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம்! நன்றி !  

 https://tinyurl.com/kavithaiipayilarangam




" யாதுமாகி நின்றாய் சக்தி " 15/11/25 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை

 


அனைவருக்கும் வணக்கம்  !

நமது கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமை தோறும் பெண்களுக்காக நடைபெறும் யாதுமாகி நின்றாய் சக்தி என்ற நிகழ்ச்சியில்  இந்த மாதம்  15/11/25 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சத்துக்களின் விவரங்கள் பற்றிய விழிப்புணர்வு வேண்டுமா தோழியே!!! "ஆரோக்கியமான பெண் ஆரோக்கியமான சமூகம்" (பெண்களின் வாழ்வில் சத்துணவின் பங்கு ) என்ற தலைப்பில் முனைவர். மகேஸ்வரி, Assistant Professor, Department of Food and Nutrition, Mannar Thirumalai Naicker College-Madurai அவர்கள் உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம் !


முத்தமிழ் முற்றம் 01.11.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணி "வழிகாட்டும் தமிழ்" திருமதி.சுபா செல்வகுமார்

 

அனைவருக்கும் வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 01.11.2025 மாலை 5.00 மணிக்கு  நடைபெற்ற முத்தமிழ் முற்றம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் திருமதி. சுபா செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு "வழிகாட்டும் தமிழ்" என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.



"நிலவொளியில்" 05/11/25 புதன்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

 

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது இன்று  05/11/25 புதன்கிழமைமிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் வாசக பெருமக்கள் தாங்கள் கற்று உணர்ந்த புத்தகங்கள் பற்றியும் தங்கள் படித்த , படைத்த கவிதைகளையும், இலக்கியங்களையும், கட்டுரைகளையும், கதைகளையும் பகிர்ந்து கொண்டனர்.  இதில்  கலந்து கொண்ட அனைவருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு : 

https://www.facebook.com/share/p/1BixoJcUX8/





"இன்று" 09.11.2025 ஞாயிறு மாலை 4 மணி "கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்" ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வில் 09.11.2025 ஞாயிறு மாலை 4 மணி அளவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் குறித்த "கவிக்கோ கவிஞர்களின் கவிஞர்" என்னும்  ஆவணப்படத்தின் திரையிடலும் அதைத் தொடர்ந்து கவிக்கோவின் சகோதரர் திரு.அப்துல் ரஷீத் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். நன்றி!

 


“நூல் அரும்புகள்” 09.11.2025 ஞாயிறு காலை 10.30 மணி

 அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (09.11.2025) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட  பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . நன்றி...

அனுமதி இலவசம் !




"இன்று" 26.11.2025 புதன்கிழமை காலை 11 மணி “இந்திய அரசியலமைப்பு சட்டம்” உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு.கு.சாமிதுரை

அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் "இன்று"  நிகழ்வில் 26.11.2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு பல்வகை பயன்பாட்டு அரங்கில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் திரு.கு.சாமிதுரை அவர்கள் “இந்திய அரசியலமைப்பு சட்டம்” என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதால்  இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்.