• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 23.02.2025 (10.30 AM)

 வணக்கம்,

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (23.02.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் ! நன்றி 




சிறுவர்களுக்கான "குரலோடு விளையாடு" -திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின் | 23.02.2025 காலை 11.00 மணி

 வணக்கம் !

 மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (23.02.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு.இராஜகலைஞன் விஜயராம், ஆசிரியர். அவர்களின், "குரலோடு விளையாடு"என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids



"Finding dory" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 22.02.2025, 4 PM

 வணக்கம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (22.02.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு "Finding dory" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...
அனுமதி இலவசம்!. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.


முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre




வேர்கள் (அனுபவ பகிர்வு ) 22.02.2025 சனிக்கிழமை காலை 11.00 "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ கலந்துரையாடல் "

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில் "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு  மற்றும் தொண்டை மருத்துவ " என்ற தலைப்பில்  கலந்துரையாடல்  நிகழ்வு 22.02.2025 சனிக்கிழமை காலை  11.00 மணியளவில்  தரைத்தளத்தில் உள்ள பல்வகைப்  பயன்பாட்டு அரங்கத்தில்  நடைபெற உள்ளது . இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.



"ஆய்வாளர் அரங்கம்" 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணி நடைபெற்றது

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 19.02.2025 புதன்கிழமை மாலை 04.00 மணிக்கு ஐந்தாம் தளத்தில் உள்ள பல்லூடகப் பிரிவில் (Multimedia section ) "ஆய்வாளர் அரங்கம்" எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் மதுரை தியாகராசர் கல்லூரி ஆய்வு மாணவர் தனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்து கலந்துரையாட உள்ளார்.  இந்நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்!



சிறுவர்களுக்கான "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" - திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன் , ஆசிரியர், அவர்களின் | 16.02.2025 காலை 11.00 மணி

 வணக்கம் !

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று(09.02.2025 )ஞாயிறுகாலை 11.00 மணிக்கு திருமதி.ரா.ஞானசுந்தரி கார்த்திகேயன், அவர்களின் "எண்களில் ஓவியம் வரையலாம் வாருங்கள்" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில், ஆசிரியர் ஞானசுந்தரி கார்த்திகேயன் அவர்கள், முதலில் குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை தூண்டும் வகையில் பயிற்சி அளித்து , எண்களை பயன்படுத்தி  ஒற்றுமையை வலியுறுத்தும் கதைக்கூறி , எண்களின்  மூலம் ஓவியம் வரைவது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன் பயிற்சி வழங்கினார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...









"யாதுமாகி நின்றாய் சக்தி" நிகழ்ச்சி | 15/02/2025, மாலை 5 மணி

அனைவருக்கும் வணக்கம்! 


நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம் தோறும் மூன்றாவது சனிக்கிழமை நடைபெறும் பெண்களுக்கான சிறப்பு  நிகழ்ச்சியான யாதுமாகி நின்றாய் சக்தி இன்று மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை நடைபெற்றது இதில் பெண்கள் தங்களது தனித்திறமைகளான ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல், கவிதை கூறுதல், பியானோ மியூசிக் வாசித்தல், கரகமாடுதல், நகைச்சுவை கூறுதல் மற்றும் தனது பேச்சுத்திறமை ஆகியவற்றை மேடையில் அரங்கேற்றினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் இந்நிகழ்ச்சியை காண வந்திருக்கும் பெண் வாசகர்கள் மட்டுமல்லாது ஆண் வாசகர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்


புகைப்படத் தொகுப்பு :

https://drive.google.com/drive/folders/1ct5v_utksuWRmGrFO7OVddvZQMzSMJyA?usp=drive_link