• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி "Enriched Activities" (07.12.2025) ஞாயிறு காலை 11.00 மணிக்கு

 


அனைவருக்கும் வணக்கம் !

மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது. 

அதன்படி (07.12.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  திருமிகு. U.உதயசூர்யா, ஆசிரியர், (மகாத்மா மான்டேசரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி) மதுரை, அவர்கள் வழங்கும்  "Enriched Activities" எனும் குழந்தைகளுக்கான  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.  நன்றி ...

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids

“நூல் அரும்புகள்” & "Creative Crafts " 30.11.2025 ஞாயிறு காலை 10.30 மணி முதல் 01.00 மணி வரை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது"

 

அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி  (30.11.2025) அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் மற்றொரு பயனுள்ள நிகழ்வாக காலை 11.00 திருமிகு A.செய்யது இப்ராஹிம், அவர்கள் வழங்கும் "Creative Crafts "எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில்  A.செய்யது இப்ராஹிம் அவர்கள்,வண்ண காகிதத்தில்  விதவிதமான  வடிவங்களில் பறவைகள் ,பூக்கள் மற்றும் அட்டை கொண்டு புகைப்பட சட்டகம்  செய்வது குறித்து  எளிய செயல்விளக்கங்களுடன் இந்நிகழ்வில்  குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...

நன்றி...

இந்நிகழ்வின் புகைபடத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/19rMmJR58G/











"Chess@KCL " (29.11.2025) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

 



வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (29.11.2025) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு .எஸ் .உமாசங்கர் அவர்களின் 60 வது Chess@KCL " என்ற சதுரங்க பயிற்சியானது சிறப்பாக நடைபெற்றது , இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர் ,பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி...

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/17myKUBGWW/








"நிலவொளியில்" 04/12/2025 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

 


அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிலவொளியில் நிகழ்ச்சியானது   04/12/25  வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது இதில் புத்தகங்களை விமர்சனம் செய்யலாம் தாங்கள் படித்து உணர்ந்த புத்தகத்தின் மேன்மையான கருத்துக்களை இங்கே பதிவிடலாம், தனது சொந்த கவிதைகளை சமர்ப்பிக்கலாம் இலக்கியங்கள் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம். சங்க கால இலக்கியங்கள் பற்றிய உரை நிகழ்த்தலாம்.  பார்வையாளராகவும் பங்கேற்கலாம்  இதில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்கண்ட இனணப்பில் பதிவு செய்து தாங்கள் படைக்க இருக்கும் படைப்பின் விவரங்களையும் இதில் பதிவு செய்து விடுங்கள்..

நாள்  :   04/12/2025    வியாழக்கிழமை

நேரம் : மாலை 6 மணி முதல் 7 மணி வரை

இடம் :  கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம்

முன்பதிவிற்கு : https://tinyurl.com/nilavozhiyil

"இன்று" நிகழ்வில் எழுத்தாளர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள் 05.12.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு

 


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வில் 05.12.2025 வெள்ளி  மாலை 5 மணி அளவில்  எழுத்தாளர்  கல்கி. கிருஷ்ணமூர்த்தி நினைவலைகள்   என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு ப. திருமலை அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளதால்  இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி!

சிறுவர்களுக்கான திரைப்படம் " Kung Fu Panda 4 " (29.11.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு திரையிடப்பட்டது.

 


அனைவருக்கும் வணக்கம்!

மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (29.11.2025)  சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறுவர்களுக்கான " Kung Fu Panda 4 " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது . இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது.

இந்நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு : https://www.facebook.com/share/p/1Dmxs3RjPu/







"சிகரம் தொடு" 29/11/ 25 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை பொதுத் தமிழ் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

 

அனைவருக்கும் வணக்கம்! 

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் தேர்வே நம் இலக்கு -  பொதுத் தமிழ் பயிற்சி என்ற தலைப்பில் கு. ரெ. மஞ்சுளா எம் ஏ,பி.எட், எம்.பில்., முதல்வர்,சி.இ.ஒ.ஏ பதின்ம மேனிலைப் பள்ளி, மதுரை 29/11/ 25 சனிக்கிழமை இன்று காலை 10 மணி முதல் 2 மணி வரை பொதுத்தமிழ் இலக்கணம் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.

புகைப்படத் தொகுப்பு: https://www.facebook.com/share/p/1Ff1L6wLz2/