• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Diffrently Abled Section : Conveniently located at the Ground floor, the Diffrently Abled Section has 1000 printed books in Braille format, audio books etc. Four numbers of wheel chairs are available at the section for the use of Differently Abled users.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

"இன்று"- 08.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி "எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவலைகள்”

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "08.04.2025" செவ்வாய்க்கிழமை    அன்று மாலை 5.00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர்  ஜெயகாந்தன் நினைவலைகள்” என்ற தலைப்பில்  குழு கலந்துரையாடல்  நடைபெறவுள்ளதால் வாசகர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.



“ நூல் அரும்புகள் ” புத்தக விமர்சனம் ( Book review ) | 30.03.2025 காலை 10.30 மணி

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (30.03.2025 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,கீழ்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் ! நன்றி.


"Angry Birds 2" என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் | 29.03.2025 , சனிக்கிழமை மாலை 4.00 மணி


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (29.03.2025 )சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சிறுவர்களுக்கான "Angry Birds 2," என்ற திரைப்படம் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர்,அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது, பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி .










குழந்தைகள் நிகழ்ச்சி - " குழந்தைகள் மனநல உளவியலாளர் மற்றும் கல்வியாளர் " திருமிகு. ராதிகா ராமன் | (30.03.2025) காலை 11.00 மணி

 வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (30.03.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு. ராதிகா ராமன் ,( குழந்தைகள் மனநல உளவியலாளர் மற்றும் கல்வியாளர் ), அவர்களின் " கற்றல் சிக்கல்கள் – புரிந்துகொண்டு தீர்வு காணும் பயணம் " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids



சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 25/03/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு சிறப்பு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  (25/03/25) LIGHT AND SOUND   (27/03/25) Electricity, Motion, Magnetism என்ற தலைப்பில் திரு சங்கரபாண்டியன் அவர்கள் பயிற்சி அளித்தார் .  இதில் போட்டித் தேர்வு மாணவர்கள்  பங்கு பெற்று பயனடைந்துள்ளனர் என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றோம் நன்றி.












“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 23.03.2025 (10.30 AM)

வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி இன்று(23.03.2025 )ஞாயிறு காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர் . அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது . 






குழந்தைகள் நிகழ்ச்சி - " பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" திரு. T. பிரகதீஸ்வரன் (Balloon Sculpture artist ) | (23.03.2025) காலை 11.00 மணி

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (23.03.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  திரு. T. பிரகதீஸ்வரன், பலூன் சிற்பக்கலைஞர் , அவர்களின் "பலூன் சிற்பங்கள் வடிவமைத்தல் பயிற்சி" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திரு.  T. பிரகதீஸ்வரன் அவர்கள்,  வண்ண வண்ண பலூன்களை  கொண்டு  வித விதமான, பூ, இதயம் ,வாத்து , பைக் ,வாள்,டெடிபியர் ,மிக்கி மவுஸ்  போன்ற  வடிவங்களில் பலூன் சிற்பங்கள் செய்வது குறித்து எளிய செயல் விளக்கங்களுடன்  குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார். இந்த நிகழ்வு குழந்தைகளின் சிந்தனைகளை தூண்டவும், பலூன்கள் மூலம் புதிய வடிவமைப்புகளை உருவாக்கும் வாய்ப்பாக அமைந்தது . இந்த நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்கு பெற்று பயிற்சி பெற்றனர் . இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்