KCL Expresso "Intelligence Speaks" 29.10.2025 மாலை 3.00 மணி
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 29.10.2025 புதன் கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 'Fundamentals Of Fintech and Blockchain' என்ற தலைப்பில் முனைவர் M. சுப்பிரமணியன் Director (MBA) R L Institute of Management Studies, Madurai. அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
நூல் அரும்புகள் 26.10.2025 ஞாயிறு காலை 10.30 மணி
அனைவருக்கும் வணக்கம்!
மதுரை ,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் (26.10.2025) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட பள்ளி குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் ! நன்றி.
சிகரம் தொடு 25/10/25 சனிக்கிழமைகாலை 10:00 மணி முதல் 01.00
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடைபெறும் சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்APTITUDE FOR ALL COMPETITIVE EXAMS: MENSURATION -2D என்ற தலைப்பில்
DHANASEKARAN PANCHAVARNAM Train Manager, Southern Railway, Madurai Division
அவர்கள் 25/10/25 சனிக்கிழமைகாலை 10:00 மணி முதல் 01.00 மணி வரைபயிற்சி அளிக்க உள்ளார.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்
அனுமதி இலவசம்
Popular science lecture 22nd தடய அறிவியலில் டிஎன்ஏ-வின் முக்கியத்துவம் " வெள்ளிக்கிழமை (24.10.2025) மாலை 5.00 மணிக்கு
அனைவருக்கும் வணக்கம்!
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை, இணைந்து (24.10.2025) வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு " Popular science lecture:22 " தடய அறிவியலில் டிஎன்ஏ-வின் முக்கியத்துவம் " என்னும் தலைப்பில் முனைவர் S. கருத்தப்பாண்டியன், மதிப்புறு வருகைப் பேராசிரியர், உயிரித்தொழில்நுட்பத்துறை ,அழகப்பா பல்கலைக்கழகம்,காரைக்குடி., அவர்கள் சொற்பொழிவாற்ற உள்ளார். ஆகவே விருப்பமுடைய மாணவர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் அனுமதி இலவசம்! நன்றி .
முன்பதிவிற்கு : https://tinyurl.com/KCL-TNSF1
" கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் " ஞாயிறு (26.10.2025) காலை 11.00 மணிக்கு
வணக்கம் !
மதுரை,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் ,தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் ,உடல் மற்றும் மன ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் மாறுபட்ட தலைப்புகளில் துறைசார்ந்த வல்லுநர்களை கொண்டு ஒவ்வொருவாரமும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்று கொண்டு வருகின்றது.
அதன்படி (26.10.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமிகு.M.சபரீஷ் ,உதவிப் பேராசிரியர்,
தடயவியல் அறிவியல் துறை,அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுரை.
மற்றும் முனைவர்,கண்ணன், K.உதவிப் பேராசிரியர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை,
அமெரிக்கன் கல்லூரி, மதுரை. அவர்கள் வழங்கும் " கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ." எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி ... அனுமதி இலவசம்
இந்நிகழ்விற்க்கான முன்பதிவிற்கு : https://tinyurl.com/kclkids
KCL Expresso "Intelligence Speaks" 'சுவைப்போம் சங்க இலக்கியம்' புதன் கிழமை (22.10.2025) மாலை 5:00 மணிக்கு
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 22.10.2025 புதன் கிழமை அன்று KCL Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் 'சுவைப்போம் சங்க இலக்கியம்' என்ற தலைப்பில் முனைவர் R.கலைவாணி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது பல்வகைப்பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள முன்பதிவு செய்வதற்கு அன்புடன் அழைக்கின்றோம்.




.jpeg)
.jpeg)
