• Front view of Kalaingar Centenary Library.

    Read More
  • Children Section : Children Section is located in the first floor.

    Read More
  • கோடைக் கொண்டாட்டம் 2024 நிகழ்வுகளின் பங்கேற்ற குழந்தைகளுக்க பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

    Read More
  • Kalaingar Centenary Library was inaugurated by Hon'ble Chief Minister Thiru.M.K.Stalin on 15.07.2023.

    Read More

புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு

பொது நூலக இயக்ககம்

பத்திரிக்கைச் செய்தி

கோயம்புத்தூரில் அமையவுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் அமையவுள்ள காமராசர் அறிவுலகம் ஆகிய இரண்டு சிறப்பு நூலகங்களுக்கும் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களும், அறிவியல், மருத்துவம், கணிணி அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வரலாறு உட்பட அனைத்து பாடங்களிலும் புகழ் பெற்ற நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இந்நூலகங்களுக்கான நூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நூல்கள் வரவேற்கப்படுகிறது இந்நூல் கொள்முதலில் பங்கேற்க, www.annacentenarylibrary.org இணையதளத்தில் "புதியதாக தொடங்கப்படவுள்ள சிறப்பு நூலகங்களுக்கான நூல் கொள்முதல்" என்ற தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள படிவத்தில் (Google Form) நூல் விவரங்களை 26.12.2025 பிற்பகல் 5.00 மணிக்குள் (Unicode Font) பதிவேற்றம் செய்ய வேண்டும், படிவத்தில் அளித்துள்ள நூல்களுக்கான ஒரு மாதிரி படியினை (Sample Copy) 05.01.2026 வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ வழங்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும்

தொலைபேசி எண்: 044 - 2220 1177

தொடர்பு கொள்ளலாம்.

KCL Expresso "Intelligence Speaks" "விதையின் ஆற்றலும் விதை அறிவியலின் ஆக்கமும்" 23.12.2025 மாலை 5.00 மணி

 அனைவருக்கும் வணக்கம்!  நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 23.12.2025   செவ்வாய்க்கிழமை அன்று KCL   Expresso "Intelligence Speaks" நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  "விதையின் ஆற்றலும் விதை அறிவியலின் ஆக்கமும்" என்ற தலைப்பில்  திரு. V. Alexalbert, Associate Professor, Department of Seed Science and Technology, Agricultural College and Research Institute, Madurai அவர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அவர்களின் உரையானது   பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00  மணிக்கு நடைபெற இருப்பதால் வாசகர்கள் கலந்துகொள்ள  முன்பதிவு செய்வதற்கு  அன்புடன் அழைக்கின்றோம்.  https://tinyurl.com/bdeu8x7b



CHESS@KCL 2nd CHAMPIONSHIP -2025 "Open Chess Tournament" 29.12.2025 திங்கள்கிழமை காலை 10.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  சனிக்கிழமைதோறும் நடைபெற்றுவந்த "Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற  குழந்தைகளை ஊக்கப்படுத்தும் விதமாக விடுமுறை கால  நிகழ்வாக  (29.12.2025) திங்கள்கிழமை  காலை 10.00 மணிக்கு "CHESS@KCL   2nd CHAMPIONSHIP -2025  "Open Chess Tournament   என்ற சதுரங்கப்போட்டி நடைபெறவுள்ளது .எனவே, விருப்பமுடைய குழந்தைகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !


குறிப்பு : - 

(இப்போட்டிக்கு   வரும் குழந்தைகள் வரும்பொழுது   நோட்,பேனா ,பென்சில் அழிப்பான் ,சதுரங்க பலகை(chess board)  ஆகியவற்றை கொண்டுவரவும்.)


1. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கடந்த ( 22.06.2024) முதல் சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணிக்கு குழந்தைகள் பிரிவில் நடைபெற்றுவந்த “Chess@KCL” என்ற வாராந்திர சதுரங்க பயிற்சியில் பங்குபெற்ற நபர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.மற்ற இடங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு அனுமதி கிடையாது.

2.வயது:  6 முதல் 18 வரை உள்ள குழந்தைகள் மட்டும் இப்போட்டியில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள் .

3. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர், முன்பதிவு செய்தவர்கள்  மட்டுமே அனுமதிக்கப்படுவர்,  உடனடி நுழைவுக்கு (Spot  Entry )அனுமதி இல்லை.  முன்பதிவு நேரம்  27.12.2025 மாலை : 6.00 மணியுடன் நிறைவு பெறும்.

4.இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் முதல் மூன்று  ஆண் மற்றும் பெண்  குழந்தைகளுக்கு (30.12.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் பரிசுகளும் மற்றும் பங்குபெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழும்  வழங்கப்படும். 

5.இந்நிகழவில் கலந்துகொள்ள வரும் குழந்தைகள் அன்றயதினம் (29.12.2025) மதிய உணவினை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

6. முற்றிலும்  இலவசம்! நிபந்தனைக்குப்பட்டது.

சதுரங்கப்போட்டி முன்பதிவிற்கு  :  https://tinyurl.com/KCLTournament




"Art & Craft Workshops " 26.12.2025 முதல் 28.12.204 வரை காலை 11.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால  பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 28.12.204 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.A.செய்யது இப்ராஹிம் , Art Teacher -Velammal Vidyalaya Viraganoor (Madurai), அவர்களின்  "Art & Craft Workshops " என்ற 3 நாள் பயிற்சி முகாம்  நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

குறிப்பு :-  

1. வயது (age ) 6 முதல் 14  வரை உள்ளவர்கள் மட்டும் இந்த போட்டியில்  கலந்துகொள்ள  அனுமதிக்க படுவார்கள்.  

2. முன்பதிவு  செய்தவர்கள் மட்டும் இந்தநிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உடனடி நுழைவுக்கு (Spot  Entry )அனுமதி இல்லை.  முன்பதிவு நேரம்  24.12.2025 மாலை : 6.00 மணியுடன் நிறைவு பெறும்.

3.ஒவ்வொருநாளும்  ஒரேநேரத்தில்  வெவ்வேறு  பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால்  ஒருவர் எதாவது ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள இயலும்,ஆகவே  விருப்பமான ஒன்றில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

4.பயிற்சியை முழுவதுமாக  முடிப்பவர்களுக்கு மட்டும் பயிற்சியின் இறுதியில் (30.12.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் நற்சான்றிதழ்கள்   வழங்கப்படும். 

 Art & Craft பயிற்சி முன்பதிவிற்கு  :  https://tinyurl.com/ArtandCraftworkshop



"Foldscope Workshop" 4 நாள் பயிற்சி முகாம் 26.12.2025 முதல் 29.12.204 வரை காலை 11.00 மணி

 அனைவருக்கும் வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறைக்கால பயிற்சி  பட்டறை நிகழ்வாக  (26.12.2025 முதல் 29.12.204 வரை)  காலை 11.00 மணிக்கு , திருமிகு.மொ.பாண்டியராஜன் ( Director ,Eden Science Club )  அவர்களின்  "Foldscope Workshop" என்ற 4 நாள் பயிற்சி முகாம்  நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

குறிப்பு :-  

1. வயது (age ) 8 முதல் 14  வரை உள்ளவர்கள் மட்டும் இந்த போட்டியில்  கலந்துகொள்ள  அனுமதிக்க படுவார்கள்.  


2. முன்பதிவு  செய்தவர்கள் மட்டும் இந்தநிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உடனடி நுழைவுக்கு (Spot  Entry )அனுமதி இல்லை.  முன்பதிவு நேரம்  24.12.2025 மாலை : 6.00 மணியுடன் நிறைவு பெறும்.


3.ஒவ்வொருநாளும்  ஒரேநேரத்தில்  வெவ்வேறு  பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால்  ஒருவர் எதாவது ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள இயலும்,ஆகவே  விருப்பமான ஒன்றில் மட்டும் முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


4.பயிற்சியை முழுவதுமாக  முடிப்பவர்களுக்கு மட்டும் பயிற்சியின் இறுதியில் (30.12.2025) அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் விழாவில் நற்சான்றிதழ்கள்   வழங்கப்படும். 


Foldscope பயிற்சி முன்பதிவிற்கு  :  https://tinyurl.com/foldscopeworkshop



சிறுவர்களுக்கான திரைப்படம் 20.12.2025 சனிக்கிழமை மாலை 4.00 மணி "FIREHEART "

 அனைவருக்கும் வணக்கம்,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற வகையிலும், சிந்தனையை விரிவுபடுத்துகின்ற வாய்ப்பாகவும் , உள்வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும் ,குழைந்தைகளுக்கான திரைப்படம் திரையிடுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு அமைகின்றது.அந்த வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு சிறார் திரைப்படங்கள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் திரையிடப்பட்டு வருகின்றது.இந்த வாரம் (20.12.2025) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு                    "FIREHEART "  என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...அனுமதி இலவசம்!. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.

முன்பதிவுக்கு: http://tinyurl.com/kcltheatre



VFX 3D டிசைன் மற்றும் அழகுக்கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் 20.12.2025

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் VFX 3D design மற்றும் அழகுக் கலைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட தொழில் மையம், இணை இயக்குனர் / பொது மேலாளர் திரு.S.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகளைப் பற்றி விளக்கினார். இந்நிகழ்வில் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





“நூல் அரும்புகள்” (21.12.2025) ஞாயிறு காலை 10.30 மணிக்கு

 




அனைவருக்கும் வணக்கம் ,

மதுரை , கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "நூல் அரும்புகள்” என்ற நிகழ்ச்சி நேற்று  (21.12.2025 ) ஞாயிறு  காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் தாங்கள் வாசித்த நூல்களை சிறந்த முறையில் விமர்சனம் ( Book review ) செய்தனர். அதனை தொடர்ந்து நூல் விமர்சனம் செய்த சிறுவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.


மேலும் மற்றொரு நிகழ்வாக காலை 11.00 திருமிகு.S.ஆனந்த சொரூப சாந்தி, பேராசிரியர் (ஓய்வு), அவர்கள் வழங்கும்  "PUPPET  SHOW" எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில், பொம்மலாட்டக் கலை மூலம் கதைகள், பாடல்கள் மற்றும் நகைச்சுவையை இணைத்து விலங்குகள் பற்றியும், குறிப்பாக, வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்வியல் குறித்தும், இயற்கையின் அடிப்படையான ஐம்பூதங்களின் முக்கியத்துவம் குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார்.இந்நிகழ்வானது குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் கற்பனை வளங்களையும், நற்சிந்தனைகளையும் வளர்க்கும் விதமாக இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிகழ்வில் திரளாக குழந்தைகளும் மற்றும் பெற்றோர்களுக்கும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...நன்றி...